Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் எனக்கு பாதிப்பு இல்லை: மத்திய அமைச்சரின் சர்ச்சை பேச்சு

Webdunia
திங்கள், 17 செப்டம்பர் 2018 (07:56 IST)
பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் விஷம் போல் ஏறி வரும் நிலையில் விரைவில் பெட்ரோல் விலை சதமடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தனக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்வால் எந்தவித பாதிப்பும் இல்லை என மத்திய அமைச்சர் ஒருவர் கருத்து தெரிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று முன்தினம் ஜெய்ப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதவாலே அவர்கள் பெட்ரோல், டீசல் விலையேற்றம் குறித்த கேள்விக்கு, '‘நான் ஒரு  மத்திய அமைச்சர். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் எனக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. அமைச்சர். பதவியை இழந்தால் நான் விலை உயர்வால் பாதிக்கப்படலாம்’ என்று கூறினார்.

அமைச்சரின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் குவிந்ததை அடுத்து அமைச்சர் தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்து கூறியதாவது: பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் உணர்வுகளை நான் அறிவேன். சாமானிய மக்களை காயப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை’ என்று கூறினர்

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments