Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தினமும் கோமியம் குடிக்கிறேன்...அதனால் கொரொனா இல்லை -பாஜக எம்பி., சர்ச்சை

Webdunia
திங்கள், 17 மே 2021 (16:27 IST)
உலகில் கொரொனா இரண்டாம் கட்ட அலைபரவிவரும் நிலையில் இந்தியாவில் இது கோர தாண்டவம் ஆடிவருகிறது.  எனவே மத்திய அரசு மாநில அரசுகளுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

தமிழகத்தில் நாளொன்றுக்கு சுமார் 30 ஆயிரம் மக்கள் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பாஜகவின் போபால் தொகுதி  எம்பி., பிரக்யா சிங், நான் தினமும் கோமியம் ( பசுவின்  சிறுநீர்) குடிக்கிறேன் அதனால் எனக்குக் கொரொனா தொற்றில்லை என சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

சமீபத்தில் ஐ.எம்.ஏ தலைவர்  ஜெயலால், பசுவின் சிறுநீர் மற்றும் சாணத்தால் கொரொனா தொற்று அழியாது என உறுதிபட தெரிவித்தார். இதை அருந்துவதால் பல தொற்றுகள் ஏற்படும்  என எச்சரித்தார்.

இந்நிலையில், இன்று பாஜகவின் போபால் தொகுதி  எம்பி., பிரக்யா சிங், நான் தினமும் கோமியம் ( பசுவின்  சிறுநீர்)குடிக்கிறேன் அதனால் எனக்குக் கொரொனா தொற்றில்லை என கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

அடுத்த கட்டுரையில்
Show comments