Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நள்ளிரவு 12 மணி வரை அவையை நடத்த தயார்; கர்நாடக சபாநாயகர் அதிரடி

Webdunia
திங்கள், 22 ஜூலை 2019 (21:14 IST)
கர்நாடக சட்டமன்றத்தில் முதல்வர் குமாரசாமி இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி தனது மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என்று சபாநாயகர் ரமேஷ்குமார் அதிரடியாக உத்தரவிட்டிருக்கும் நிலையில் தேவைப்பட்டால் நள்ளிரவு 12 மணி வரை அவையை நடத்த தயார் என்று அறிவித்துள்ளார்.
 
கர்நாடக சட்டப்பேரை அமளி காரணமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன் மீண்டும் கூடியது. இன்று நள்ளிரவுக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என பாஜக உறுப்பினர்கள் வலியுறுத்திய நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் பேரவையை ஒத்திவைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
 
எனவே இருதரப்பு எம்.எல்.ஏக்களும் மீண்டும் அமளியில் ஈடுப்பட்டிருப்பதால் அதிருப்தி அடைந்த சபாநாயகர், 'உங்களுக்கு வாக்களித்த 6 கோடி மக்களின் மீது உங்களுக்கு பயம் இருந்தால் இப்படி நடந்து கொள்ள மாட்டீர்கள் என்று கூறிய சபாநாயகர், நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடக்கும் என்றால் நான் நள்ளிரவு 12 மணி வரை அவையை நடத்த தயார் என்றும் அறிவித்தார்.
 
எனவே இன்னும் சற்று நேரத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்குமா? அல்லது நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னரே முதல்வர் குமாரசாமி தனது பதவியை ராஜினாமா செய்வாரா? என்பது தெரிந்துவிடும் என அரசியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதபோதகரை எரித்துக் கொன்ற சம்பவம்! குற்றவாளி விடுதலை! - கொண்டாடிய விஷ்வ ஹிந்து பரிஷத்!

திருமணமான 4 மாதத்தில் கணவனை பீர் பாட்டிலால் கொலை செய்த 17 வயது மைனர் மனைவி.. அதிர்ச்சி சம்பவம்..!

உயிரைக் கொல்லும் மஞ்சள் காய்ச்சல்! 34 பேர் பலி! - சுகாதார அவசரநிலை பிரகடனம்!

1500 ரூபாய்க்கு சந்தேகப்பட்டு 6 மணி நேரம் விசாரணை! மாணவி தற்கொலை! - கோவையில் அதிர்ச்சி!

தற்காப்புக்காக இந்துக்கள் ஆயுதம் வைத்து கொள்ளுங்கள்: பாஜக பிரமுகரின் சர்ச்சை பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments