Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் சிறுபான்மையினருக்கு எதிரானவன் அல்ல: பிரவீன் தொகாடியா

Webdunia
வெள்ளி, 27 பிப்ரவரி 2015 (19:16 IST)
ஒடிசாவில் பதட்டம் நிறைந்த காந்தமால் மாவட்டத்தில் விஷ்வ இந்து பரிஷத் தலைவர் பீரவீன் தொகாடியா பேசுவதற்கு அம்மாநில அரசு அனுமதி மறுத்தது. இந்த நிலையில், தான் சிறுபான்மையினருக்கு எதிரானவன் அல்ல என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.
 
செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பீரவீன் தொகடியா கூறியதாவது:-

“நான் சிறுபான்மையினருக்கு எதிரானவன் கிடையாது. ஆனால் இந்து சமய சகோதர சகோதரிகளின் நலன்களுக்காக அவர்களுக்கு ஆதரவாக கண்டிப்பாக நான் பேசுவேன். இந்துக்கள் பெரும்பாலும் ஏழைகளாக இருக்கின்றனர். அவர்களுக்கு இலவசமாக சுகாதார வசதிகள் கிடைக்க வேண்டும். அனைத்து இந்துக்களும் படித்தவர்களாக வேண்டும். அப்போதுதான் அவர்களால் பிறரின் உதவி இல்லாமல் வாழ முடியும். அனைத்து இந்துக்களுக்கும் உணவு இருக்க வேண்டும். அவற்றிற்காக நாம் அனைவரும் பணம் மற்றும் அன்பை நமது பங்களிப்பாக அளிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments