Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

Prasanth Karthick
புதன், 15 மே 2024 (19:00 IST)
இந்தியாவில் மக்களவை தேர்தலில் 4 கட்ட தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் வாரணாசியில் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளார்.



இந்தியாவில் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில் இதுவரை 4 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. இந்நிலையில் அடுத்தக்கட்ட தேர்தலில் உத்தர பிரதேசத்தின் வாரணாசி உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்காக வாரணாசியில் வேட்புமனு தாக்கல் செய்த பிரதமர் மோடி அப்பகுதியில் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் இன்று மகாராஷ்டிராவின் தானேவில் நடந்த தேர்தல் பேரணியில் கலந்து கொண்டு பேசிய அவர் “நேற்று காசியில் இருந்தபோது தேர்தல் பிரச்சாரத்தின்போது பல இளைஞர்களை சந்தித்தேன். நாட்டு இளைஞர்களிடம் பல புதிய சிந்தனைகள் இருப்பதை கண்டேன்.

இளைஞர்களை சந்தித்த இந்த நாட்கள் எனக்கு பல நல்ல ஆலோசனைகள் கிடைக்க வழி செய்தது. ஆகவே இளைஞர்களுக்காக 25 நாட்களை ஒதுக்கியுள்ளேன். நாட்டில் உள்ள இளைஞர்கள் தங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களை எனக்கு அனுப்ப வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளார்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதிர்ப்பை மீறி புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்! வழக்கறிஞர்கள் போராட்டம்..!

முதுகலை, இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவது எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

கனமழையால் முக்கிய சாலையின் நடுவே திடீரென பெரிய பள்ளம்.. அகமதாபாத் நகரில் பரபரப்பு..!

கனமழை எதிரொலி. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு.. எந்தெந்த பகுதிகளில்?

தமிழக மீனவர்கள் 25 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை.. இந்த அட்டூழியத்திற்கு முடிவே இல்லையா?

அடுத்த கட்டுரையில்
Show comments