’’மதுக்கடைகளில் கோசாலைகளை தொடங்கப்போகிறேன் ’’- உமா பாரதி

Webdunia
புதன், 1 பிப்ரவரி 2023 (14:51 IST)
மத்தியபிரதேச மாநிலத்தில் மது கொள்கையை அமல்படுத்தாவிட்டால் அங்கு கோசாலைகளைத் தொடங்குவோம் என்று உமா பாரதி தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேச மா நிலத்தில் முதல்வர் சிவராஜ் சிங் தலைமையிலான சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.

போபாலில் உள்ள அயோத்யா நகர் பகுத்யில் உள்ள அனுமன் மற்றும் துர்கா கோவிலுக்கு பாஜகவைச் சேர்ந்த மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான உமாபாரதி சென்றிருந்தார்.

அப்போது, கோவிலுக்கு முன் மதுக்கடை இருந்ததைப் பார்த்து, அவர் கூறியதாவது: கோவிலுக்கு முன்னால் அமைந்துள்ளட் பாருடன் இணைந்த மதுக்கடையை அகற்ற வேண்டும். முதல்வர் என்னிடம் ஜனவரி 31 ஆம் தேதி புதிய மதுக்கொள்கை அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

ஆனால், இன்னும் அதை அறிவிக்கவில்லை. அவர் அந்தக் கொள்கையை அறிவிக்கும் வரை என்னால் எதிர்பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அதனால், வரும் 3 ஆம் தேதி கோசாலைகளை தொடங்கப் போகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனித தலைமுடி ஏற்றுமதியில் ரூ.50 கோடி மோசடி.. சென்னை உள்பட 7 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை..!

2022ல் இறந்த வாக்காளரின் புகைப்படத்திலும் பிரேசில மாடல் அழகி புகைப்படம்.. அதிர்ச்சி தகவல்..!

எலான் மஸ்கின் சம்பளம் ரூ. 82 லட்சம் கோடி: டெஸ்லா பங்குதாரர்கள் இன்று முடிவு எடுக்கிறார்களா?

சென்னை உள்பட 14 மாவட்டங்களில் இன்றிரவு கொட்டப்போகும் மழை: வானிலை எச்சரிக்கை..!

தேர்தல் ஆணையத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்: திமுக கூட்டணி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments