Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வரதட்சணை கொடுக்காவிட்டால் உல்லாசமாக இருந்த ஆபாச படத்தை வெளியிடுவதாக கணவர் மிரட்டல்

Webdunia
வியாழன், 19 மார்ச் 2015 (11:50 IST)
வரதட்சணை கொடுக்காவிட்டால், தன்னுடன் உல்லாசமாக இருந்த ஆபாச படத்தை வெளியிடுவதாக மனைவியை மிரட்டிய கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
கர்நாடகா மாநிலம், தார்வார் மாவட்டத்தைச் சேர்ந்த ரியாஸ் அகமத் (28) என்பவருக்கும் ஷகினா எனபவருக்கும் (25) கடந்த 2013ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்கு பின்னர் ரியாஸ் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி உள்ளார்.
 
மேலும், ரியாஸ் அகமத், ஷாகினாவுடன் உல்லாசமாக இருந்ததை அவருக்குத் தெரியாமல் செல்போன் பிடித்துள்ளார். தற்போது அந்த ஆபாச வீடியோ படத்தை காட்டி, வரதட்சணை வாங்கி வரவிட்டால் இணையதளத்தில் வெளியிடுவதாக ரியாஸ் மிரட்டி உள்ளார்.
 
இது குறித்து புகார் அளித்ததன் பேரில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் ஷகினாவின் கணவர் ரியாஸ் அகமத்தை காவல் துறையினர் கைது செய்தனர்.

இரண்டாவது மனைவி வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததால் ஆத்திரமடைந்த கணவன், மனைவியை அரிவாளால் வெட்டி கொலை!

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம்.! கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் கைது..!!

இதயம் நின்ற சிறுவனின் உயிரை காப்பாற்றிய பெண் மருத்துவர்.. குவியும் பாராட்டுக்கள்..!

மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் உல்லாச குளியல் ஆடும் சிறுவர்கள்