Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலைமை செயலாளர் பணியில் இருந்து ஓய்வு பெறும் கணவர்.. அதே பதவிக்கு மனைவி நியமனம்..!

Siva
வியாழன், 22 ஆகஸ்ட் 2024 (18:10 IST)
கேரள மாநில தலைமைச் செயலாளர் பணியில் இருந்து ஓய்வு பெறும் அதே நாளில் அந்த பதவிக்கு அவருடைய மனைவி நியமனம் செய்யப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலத்தின் தலைமைச் செயலாளராக இருக்கும் டாக்டர் வேணு என்பவர் ஆகஸ்ட் 31ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். இதனை அடுத்து அவருடைய மனைவி சாரதா முரளிதரன் அடுத்த தலைமை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து கணவர் ஓய்வு பெறும் அதே தலைமைச் செயலாளர் பதவியில் மனைவி உட்கார இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கணவர் வகித்த பதவி பதவியை மனைவி வகிப்பது என்பது மிகவும் அரிதான செய்தி என்பதால் இந்த செய்தி நாடு முழுவதும் கவனம் பெற்றுள்ளது.   இம்மாதம் 31ஆம் தேதி தலைமைச் செயலாளராக வீட்டில் இருந்து காரில் வேணு புறப்பட்டு செல்வார், ஆனால் அதே காரில் தலைமைச் செயலாளராக வேணுவின் மனைவி சாரதா வீட்டில் இருந்து தலைமை செயலக அலுவலகத்துக்கு செல்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளி வாகனம் பழுது ஏற்பட்டதால் பள்ளி மாணவர்களை இறங்கி வாகனத்தை தள்ளி விடச் சொன்ன தனியார் பள்ளியின் அவலம்!

குளிர்பானத்தில் மது கலந்துக் கொடுத்து மூதாட்டியிடம் செயின் பறிப்பு: உறவினர் போல நாடகமாடிய கணவன்,மனைவி கைது....

சந்திரயான் - 4 திட்டத்துக்கு ஒப்புதல் அளித்த மத்திய அமைச்சரவை.!!

ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் விழாவில் அரசியல் சார்ந்த கேள்விகளுக்கு பதில்அளிக்காமல்சிரித்தபடி சென்ற சவுமியா அன்புமணி!

யாரைத் துணை முதல்வராக அமர வைப்பது என்பது குறித்து ஆளுங்கட்சி எடுக்கின்ற முடிவு- தொல்.திருமாவளவன்!...

அடுத்த கட்டுரையில்
Show comments