Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தன்னை விட மனைவி நல்ல வேலையில் இருந்ததால், மனைவியை அடித்துக் கொன்ற கணவன்

Webdunia
சனி, 13 ஜனவரி 2018 (14:58 IST)
உத்திர பிரதேச மாநிலத்தில் தன்னை விட மனைவி நல்ல வேலையில் இருந்ததால், பொறாமையில் மனைவியை அடித்துக் கொன்ற கணவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

உத்திர பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்தவர் குல்தீப் ராகவ். இவரது மனைவி ரிச்சா சிசோடியா. இவர்களுக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ரிச்சா தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வந்தார். சரியான வேலை கிடைக்காத குல்தீப், மளிகைக் கடையில் உதவியாளராக பணி புரிந்து வந்தார். மனைவி நல்ல வேலையில் இருப்பதால், அவர் மீது பொறாமை கொண்ட குல்தீப், ரிச்சாவிடம் தேவையில்லாமல் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். சம்பவத்தன்று கணவன் மனைவிக்கிடையே சண்டை முற்றிப்போகவே குல்தீப் ரிச்சாவை கடுமையாக தாக்கியுள்ளார்.
 
இதனால் படுகாயமடைந்த ரிச்சா பரிதாபமாக உயிரிழந்தார். விஷயமறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் ரிச்சாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து போலீஸார் குல்தீப்பை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீ எதுக்கும்மே சரிப்பட்டு வரமாட்ட.. முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஈபிஎஸ்..!

9ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்.. 9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் செய்த கொடூரம்..!

No UPI, Only Cash.. கடைகளில் வைக்கப்படும் திடீர் பதாகையால் பரபரப்பு.. என்ன நடந்தது?

83 லட்சம் இறந்தவர்களின் ஆதார் அட்டை என்ன ஆச்சு? வெறும் ஒரு லட்சம் மட்டுமே நீக்கப்பட்டதா?

சாகும் போது கருணாநிதி கையை பிடித்து கெஞ்சினார் காமராஜர்: திருச்சி சிவாவின் சர்ச்சை பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments