Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முதல்வருக்கு எதிராக சுப்பிரமணிய சுவாமி திடீர் உண்ணாவிரதம்

முதல்வருக்கு எதிராக சுப்பிரமணிய சுவாமி திடீர் உண்ணாவிரதம்

முதல்வருக்கு எதிராக சுப்பிரமணிய சுவாமி திடீர்  உண்ணாவிரதம்
, திங்கள், 20 ஜூன் 2016 (17:38 IST)
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக பாஜக டெல்லி கிழக்கு தொகுதி எம்பி மகேஷ் கிரி மற்றும் சுப்பிரமணிய சுவாமி ஆகியோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 
டெல்லி நகராட்சி அதிகாரி எம்எம் கான் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் பாஜக எம்பி மகேஷ் கிரிக்கு தொடர்பு உள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டி இருந்தார்.
 
தன் மீதான குற்றச்சாட்டுக்கு உரிய ஆதாரத்தை வெளியிடக் கோரி, நேற்று மாலை முதல் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டு முன்பு, பாஜக டெல்லி கிழக்கு தொகுதி எம்பி மகேஷ் கிரி தனது ஆதரவாளர்களுடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
 
இந்தப் போராட்டத்தில் பாஜக எம்பி சுப்பிரமணிய சுவாமி கலந்து கொண்டு அவருக்கு தனது ஆதரவை தெரிவித்தார். இதனால், டெல்லி தலைநகரம் அரசியல் புயலில் சிக்கியுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாடிக்கையாளரை குஷிபடுத்த பாலியல் தொழிலாளியை அனுப்பிய வங்கி அதிகாரி