Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அசாமில் கொரோனாவை தாண்டிய வெள்ளம்! – 100க்கும் மேல் பலி!

Webdunia
புதன், 29 ஜூலை 2020 (09:57 IST)
அசாமில் தென்மேற்கு பருவக்காற்றால் மழை தீவிரமடைந்துள்ள நிலையில் வெள்ளப்பெருக்கால் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அசாம் மாநிலத்திலும் கொரோனா பாதிப்பு உள்ளது. இதுவரை 33 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் 86 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் அசாமில் கொரோனாவை விட பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது மழை. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள சூழலில் அசாம், பீகார் மாநிலங்களில் பல நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. இதனால் பிரம்மபுத்திரா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அசாமின் நதிக்கரயோர பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வெள்ளம் மற்றும் மழையினால் அசாமில் 108 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒருபக்கம் கொரோனா ஏற்படுத்தி வரும் பாதிப்பிலிருந்தே மீளாத சூழலில் மழை வெள்ளம் மேலும் அசாமில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments