Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லி மோசமான வானிலை - 40-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதம்!

Webdunia
திங்கள், 23 மே 2022 (10:23 IST)
மோசமான வானிலை டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமான செயல்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளது. 

 
இன்று அதிகாலை பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் டெல்லியின் பல பகுதிகள் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது. மழையின் காரணமாக காலை 5:40 மணி முதல் 7 மணி வரை, நகரின் வெப்பநிலை 11 டிகிரி செல்சியஸ் குறைந்துள்ளது.  
 
மோசமான வானிலை டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமான செயல்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆம், டெல்லியில் சூறைக்காற்று மற்றும் மழை காரணமாக 40-க்கும் மேற்பட்ட விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 
 
விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய பல்வேறு விமானங்கள் ஜெய்ப்பூர் மற்றும் அண்டை மாநில விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. பல விமானங்கள் வந்து சேராததால் விமான நிலையத்திற்கு செல்வதற்கு முன் பயணிகளின் விமான நிலையை சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்தை தொடர்பு கொண்டு பார்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளன. 
 
மேலும் அடுத்த இரண்டு மணி நேரத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்றும் மணிக்கு 60 - 90 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வல்லரசு நாடுகளின் போர்களால் மக்களிடையே அன்பு மறைந்துவிட்டது! - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை!

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.2,73,500 வரை.. எப்படி விண்ணப்பிப்பது?

கால் டாக்சி ஓட்டுனர்களை கொன்ற சீரியல் கொலைகாரன்.. 24 ஆண்டுகளுக்கு பின் கைது..!

முதலமைச்சர் சொல்லியும் கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்யாத பள்ளி நிர்வாகம்.. 7ஆம் வகுப்பு மாணவியின் ஐ.ஏ.எஸ் கனவு என்ன ஆகும்?

தவெக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பட்டறை! அடுத்த கட்ட பாய்ச்சலில் விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments