Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஹூப்ளி ரயில் விபத்து: 5 பேர் பலி

ஹூப்ளி ரயில் விபத்து: 5 பேர் பலி

ஹூப்ளி ரயில் விபத்து: 5 பேர் பலி
, திங்கள், 8 பிப்ரவரி 2016 (23:15 IST)
ஹூப்ளி ரயில் நிலையத்தின் பழமையான கட்டடம் திடீரென இடிந்து விழுந்த விபத்தில் 5 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
 

 
கர்நாடகா மாநிலம், ஹூப்ளி ரயில்வே நிலையத்தில்  பழமையான கட்டிடத்தில் ரயில்வே பார்சல் சேவை நிலையமும், ரயில்வே பாதுகாப்பு காவல் நிலையமும் உள்ளது.
 
இந்த நிலையில், இன்று மதியம் திடீரென்று அந்தக் கட்டிடம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில், 5 பேர் பரிதாபமாக பலியானார்கள். பலர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
 
தகவல் அறிந்தக காவல் ஆணையாளர் பி.ஹெச்.ராணே தலைமையில் அதிகாரிகள் விரைந்து சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
 
இந்தக் கட்டிடம் சுமார் 90 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil