Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

6 வயதுச் சிறுமி மீது பாலியல் வன்முறை - அறிக்கை கேட்கிறது மனிதவளத் துறை

6 வயதுச் சிறுமி மீது பாலியல் வன்முறை - அறிக்கை கேட்கிறது மனிதவளத் துறை
, வெள்ளி, 18 ஜூலை 2014 (19:55 IST)
பெங்களூரில் பள்ளியில் 6 வயதுச் சிறுமி மீது நடந்த பாலியல் வன்முறை குறித்து ஊடகங்களில் நேற்று செய்திகள் வெளியாகின. இதையடுத்து, மத்திய மனிதவள துறை அமைச்சகம் தனது கவலையைத் தெரிவித்துள்ளது.
 
முன்னதாக, பெங்களூரின் விப்ஜியார் மேல்நிலைப் பள்ளியில் 1 ஆம் வகுப்பு படித்து வந்த 6 வயதுச் சிறுமியை பள்ளியில் பணிபுரியும் அடையாளம் தெரியாத நபர் பாலியல் பலாத்காரம் செய்தார். இது, ஊடகங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பு நிலவியது.
 
 
இதைத் தொடர்ந்து, மத்திய அரசின், பள்ளிக் கல்வித் துறையின் தலைமைச் செயலர் இந்தச் சம்பவம் குறித்து, கர்நாடக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று தலைமைச் செயலரிடம் விசாரித்தார்.
 
பள்ளி நிர்வாகம் குழந்தைகளின் பாதுகாப்புக்காக என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளது என்பது குறித்து விரிவான அறிக்கை அளிக்கும்படி கர்நாடக அரசிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
 
இந்தச் சம்பவம் குறித்துக் கர்நாடக அரசு எடுத்துள்ள நடவடிக்கை பற்றிய விவரங்களை மனிதவள அமைச்சகம் கோரியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil