Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்ணை கற்பழித்து கொலை செய்த இளைஞரின் வீடு இடிப்பு.. அரசின் அதிரடி நடவடிக்கை..!

Webdunia
புதன், 28 ஜூன் 2023 (07:27 IST)
இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த இளைஞரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
உத்தர பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவருக்கும் சிக்கந்தர் என்பவருக்கும் சமூக வலைதள மூலம் நட்பு ஏற்பட்டு அதன் பின்னர் காதல் ஏற்பட்டது. 
 
இந்த நிலையில் அந்த பெண்ணை தனிமையில் வரச் சொன்ன சிக்கந்தர் அவரை பாலியல் வன்கொடுமை செய்து கல்லை தலையில் போட்டு கொலை செய்ததாக தெரிகிறது. 
 
இதனை அடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை செய்து கொண்டிருக்கும் நிலையில் அவரது வீடு அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது என்பது தெரிய வந்தது. 
 
இதனை அடுத்து அடுத்த சில மணி நேரத்தில் அந்த வீட்டை அரசு அதிகாரிகள் இடித்து தள்ளியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உசிலம்பட்டி சாலை முழுக்க 500 ரூபாய் நோட்டுகள்! அள்ளிச்சென்ற மக்கள்!

சிபிஎஸ்இ நியனமன தேர்வில் இந்தித் திணிப்பு.. மத்திய அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்பி கடிதம்..!

காதலை ஏற்க மறுத்த 14 வயது சிறுமி.. ஜாமினில் வெளிவந்து வெட்டி கொலை செய்த இளைஞர்..!

கனமழை காரணமாக நிலச்சரிவு.. சிம்லாவில் 80 சாலைகள் மூடப்பட்டன..!

பஜாஜ் நிறுவனத்தின் அட்டகாசமான CNG பைக்! Bajaj Freedom 125 CNG அறிமுகம்! – சிறப்பம்சங்கள் மற்றும் விலை!

அடுத்த கட்டுரையில்