Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கழிவறை சுத்தம் செய்ய மறுத்த சிறுவனை தீ வைத்து எரித்த கொடூரம்!

Webdunia
செவ்வாய், 31 ஜனவரி 2017 (21:28 IST)
ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் ஆதரவற்ற சிறார்களுக்கான விடுதியில் கழிவறையை சுத்தம் செய்ய மறுத்த சிறுவனை, விடுதி காப்பாளர் தீவைத்து எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள ஆதரவற்ற சிறார்களுக்கான விடுதியில் வெம்பட்டி பிரவீண் (14) என்ற சிறுவன் உடலில் 70 சதவீத தீக்காயங்களுடன் விஜயவாடாவில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகிறான்.

சிறுவன் அளித்த வாக்குமூலத்தில், விடுதி காப்பாளர் கதுரி வெங்கடேஸ்வரா ராவ் தான், தனது உடலில் தீ வைத்ததாகக் கூறியுள்ளான்.

கழிவறையை சுத்தம் செய்ய மறுத்ததால், பிரவீண் மீது ஆத்திரம் அடைந்த காப்பாளர், பெட்ரோலை ஊற்றி தீ வைத்ததாகக் கூறப்படுகிறது.

தீயில் கருகிய சிறுவன் தன்னைக் காப்பாற்றுமாறு கதறியும், தான் கூறுவதை செய்வதாக ஒப்புக் கொண்டால்தான் காப்பாற்றுவேன் என்று காப்பாளர் கதுரி வெங்கடேஸ்வரா ராவ் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் குடியரசு தினத்தன்று மாலை 4 மணியளவில் நடந்ததாக, பிரவீணுடன் தங்கியிருக்கும் அவரது சகோதரன் அதுரி மணித் கூறியுள்ளார். மேலும், தன்னையும், தனது சகோதரனையும் உண்மையைச் சொல்லக் கூடாது என்று காப்பாளர் மிரட்டினதாக தெரிவித்துள்ளனர்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments