Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹரிகிருஷ்ணா சடலத்துடன் செல்பி எடுத்த மருத்துவமனை ஊழியர்கள்

Webdunia
சனி, 1 செப்டம்பர் 2018 (09:12 IST)
மறைந்த ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் என்.டி.ராமாராவின் மகன் ஹரிகிருஷ்ணாவின் சடலத்துடன் மருத்துவமனை ஊழியர்கள் செல்பி எடுத்துக் கொண்டது கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 
ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் என்.டி.ராமாராவின் மகனும், ஜீனியர் என்.டி.ஆரின் தந்தையும், நடிகரும், தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்தவருமான ஹரிகிருஷ்ணா நல்கொண்டா என்ற பகுதியில் கடந்த 29 ஆம் நடைபெற்ற கார் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதற்கிடையே ஹரிகிருஷ்ணா உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்த பின்னர், ஹரிகிருஷ்ணாவின் சடலத்துடன் மருத்துவமனையின் கம்பவுண்டர் நரசிம்மா, 3 செவிலியர்களுடன் செல்பி எடுத்து அதனை தனது நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளார்.
 
இந்த புகைப்படமானது வேகமாக பரவவே, விளம்பரம் தேட இவ்வளவு கீழ்தரமாக நடந்து கொண்ட மருத்துவமனை ஊழியர்களுக்கு பலர் கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.
 
இதனையடுத்து மருத்துவமனை நிர்வாகம் இரக்கமற்று செயல்பட்ட அந்த ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. மேலும் அனைவரிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்பதாக மருத்துவமனை நிர்வாகம் மன்னிப்பு அறிக்கை வெளியிட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments