Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தண்டவாளத்தில் பிணமாக கிடந்த இந்திய ஹாக்கி வீராங்கனை

Webdunia
வெள்ளி, 4 ஆகஸ்ட் 2017 (14:23 IST)
அரியானா மாநிலத்தை சேர்ந்த சர்வதேச ஹாக்கி வீராங்கனை ஜோதி குப்தா ரெவாரி ரயில் நிலைய தண்டவாளத்தில் பிணமாக கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


 

 
அரியானா மாநிலத்தை சேர்ந்த சர்வதேச ஹாக்கி வீராங்கனை ஜோதி குப்தா(20) இந்திய அணியில் முன்கள வீராங்கனையாக விளையாடி வந்தார். கடந்த 2ஆம் தேதி வீட்டில் பலகலைக்கழகத்திற்கு சென்று சான்றிதழில் பெயர் மாற்றம் செய்யப்போவதாக கூறி வீட்டில் இருந்து சென்றுள்ளார். 
 
அதன்பின் அவர் இரவு வீடு திரும்பவில்லை. இந்நிலையில் ரெவாரி ரயில் நிலைய தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். கடந்த புதன்கிழமை இரவு ரெவாரி ரயில் நிலையத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டதாக கூறப்படுகிறது.
 
இவர் 2016ஆம் ஆண்டு தென் ஆசிய விளையாட்டு போட்டியில் பெண்கள் இந்திய ஹாக்கி அணி விளையாடியுள்ளார். மேலும் இவரது மரணம் குறித்த காரணங்கள் எதுவும் வெளியாகவில்லை. உண்மையிலே அவர் தற்கொலைதான் செய்துக்கொண்டாரா? இல்லை கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments