தண்டவாளத்தில் பிணமாக கிடந்த இந்திய ஹாக்கி வீராங்கனை

Webdunia
வெள்ளி, 4 ஆகஸ்ட் 2017 (14:23 IST)
அரியானா மாநிலத்தை சேர்ந்த சர்வதேச ஹாக்கி வீராங்கனை ஜோதி குப்தா ரெவாரி ரயில் நிலைய தண்டவாளத்தில் பிணமாக கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


 

 
அரியானா மாநிலத்தை சேர்ந்த சர்வதேச ஹாக்கி வீராங்கனை ஜோதி குப்தா(20) இந்திய அணியில் முன்கள வீராங்கனையாக விளையாடி வந்தார். கடந்த 2ஆம் தேதி வீட்டில் பலகலைக்கழகத்திற்கு சென்று சான்றிதழில் பெயர் மாற்றம் செய்யப்போவதாக கூறி வீட்டில் இருந்து சென்றுள்ளார். 
 
அதன்பின் அவர் இரவு வீடு திரும்பவில்லை. இந்நிலையில் ரெவாரி ரயில் நிலைய தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். கடந்த புதன்கிழமை இரவு ரெவாரி ரயில் நிலையத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டதாக கூறப்படுகிறது.
 
இவர் 2016ஆம் ஆண்டு தென் ஆசிய விளையாட்டு போட்டியில் பெண்கள் இந்திய ஹாக்கி அணி விளையாடியுள்ளார். மேலும் இவரது மரணம் குறித்த காரணங்கள் எதுவும் வெளியாகவில்லை. உண்மையிலே அவர் தற்கொலைதான் செய்துக்கொண்டாரா? இல்லை கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா எங்கள் மீது தாக்குதல் நடத்தினால் சவுதி அரேபியா எங்களுக்கு உதவும்: பாகிஸ்தான் அமைச்சர்.

எச்-1பி விசா கட்டண உயர்வு: அமேசான், டிசிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு பெரும் பாதிப்பு?

விரைவில் ஹைட்ரஜன் குண்டு வெடிக்கும்: வாக்கு திருட்டு குறித்து ராகுல் காந்தி..!

"சொன்னதைச் செய்தார்களா?" திருச்சியை அடுத்து நாகையிலும் பட்டியலிட்ட விஜய்..!

இந்த பூச்சாண்டி எல்லாம் வேண்டாம்.. கெத்தாக தேர்தலை சந்திக்க வாருங்கள்: ஸ்டாலினுக்கு விஜய் சவால்..!

அடுத்த கட்டுரையில்
Show comments