Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே போதை ஊசியை பயன்படுத்திய 10 பேருக்கு எச்.ஐ.வி.. சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்..!

Mahendran
வியாழன், 27 மார்ச் 2025 (15:29 IST)
கேரளாவில் ஒரே போதை ஊசியை பயன்படுத்திய 10 பேருக்கு எச்ஐவி தொற்று ஏற்பட்டிருப்பது உறுதியாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
கேரள மாநிலத்தின் வடக்கு பகுதியிலுள்ள வாலாஞ்சேரியில் போதைப் பொருள் அடிமைகளாக இருந்த பலரை போலீசார் கைது செய்தனர். அவர்களில் சிலர் பாலியல் தொழிலாளர்கள் மற்றும் போதைப் பொருள் பழக்கமுள்ளவர்கள் என தெரிய வந்ததை அடுத்து மருத்துவ சோதனை நடத்தப்பட்டது.
 
இந்த சூழலில், கைது செய்யப்பட்டவர்களில் ஒருவருக்கு எச்ஐவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பின்னர், அவருடன் தொடர்பில் இருந்தவர்களை பரிசோதிக்கும்போது, 3 வடமாநிலத் தொழிலாளர்கள் உட்பட மேலும் 9 பேருக்கு எச்ஐவி பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.
 
அனைவரும் ஒரே போதை ஊசியைப் பயன்படுத்தியதால் நோய்த்தொற்று பரவியிருக்கலாம் என மருத்துவ அதிகாரிகள் கூறுகின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சந்தேகிக்கப்படும் நிலையில், அதிகாரிகள் தொடர்ந்து மேலாய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
 
எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்ட அனைவரும் தேவையான சிகிச்சை பெறுவதை உறுதி செய்வதே எங்களின் முதன்மையான நோக்கம்" என்று மலப்புரம் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி ரேணுகா தெரிவித்தார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இசைஞானி இளையராஜாவுக்கு பாராட்டு விழா.. தேதி அறிவித்த முதல்வர் ஸ்டாலின்..!

உதயநிதிக்கு உடல்நலமில்லை.. மகனுக்காக மானிய கோரிக்கையை முன்வைத்த முதல்வர்..!

ஆன்லைன் சூதாட்ட வழக்கு.. 15 மாதங்களாக விசாரணைக்கு வராமல் தடுக்கும் சக்தி எது? ராமதாஸ்

சென்னைக்கு வருகிறது ரஷ்ய போர்க்கப்பல்.. கூட்டு பயிற்சி பெற திட்டம் என தகவல்..!

வாட்ஸ்ஆப் சாட் மூலம் வரி ஏய்ப்பை கண்டுபிடிக்கிறோம்: நிர்மலா சீதாராமன் தகவல்..!

அடுத்த கட்டுரையில்