Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்து பெண்கள் 10 குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் - சங்கராச்சாரியார் வாசுதேவானந்த்

Webdunia
புதன், 21 ஜனவரி 2015 (12:05 IST)
அகமதாபாத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில், இந்து பெண்கள் 10 குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று பத்ரிகாஷ் மடத்தின் சங்கராச்சாரியாரான வாசுதேவானந்த்  சரஸ்வதி கூறியுள்ளார்.
 
அகமதாபாத்தில் நடைபெற்ற மெகா மேளாவில் பத்ரிகா மடத்தின் சங்கராச்சாரியாரான வாசுதேவானந்த் சரஸ்வதி பேசினார்.
 
இது குறித்து வாசுதேவானந்த் சரஸ்வதி பேசியதாவது:-
 
இந்து மக்களின் ஒற்றுமையினால் மட்டுமே நரேந்திர மோடி பிரதமர் ஆகியுள்ளார். இந்து மக்கள் தங்களது பெரும்பான்மை பலத்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டுமானால் ஒவ்வொரு இந்து பெண்ணும்குறைந்தது 10 குழந்தைகளாவது பெற்றுக் கொள்ளவேண்டும். ஒவ்வொருவரும் தங்களது இந்து மதமாகிய வேர்களுக்கு திரும்ப வேண்டும்.
 
மதமாற்றத்தை தடை செய்யக்கூடாது. ஏனெனில் இந்து மதத்திலிருந்துதான் கிருஸ்துவமும் இஸ்லாமியமும் மற்றும் சீக்கியமும் உருவானது. மதம் மாறியதற்காக எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கக்கூடாது''. இவ்வாறு வாசுதேவானந்த் கூறியுள்ளார்.
 
முன்னர் பாஜக எம்.பி சாக்ஷி மகாராஜ் இந்து பெண்கள் 4 குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments