Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோட்சேவிற்கு கோவில் கட்டி பூஜை: இந்துமகா சபை தடாலடி!

கோட்சேவிற்கு கோவில் கட்டி பூஜை: இந்துமகா சபை தடாலடி!

Webdunia
வியாழன், 16 நவம்பர் 2017 (14:11 IST)
தேசத்தந்தை எனப்போற்றப்படும் மகாத்மா காந்தியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேவிற்கு இந்துமகா சபையினர் கோவில் கட்டி பூஜை செய்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


 
 
கோட்சே, காந்தியைக் கொன்ற குற்றத்திற்காக 1949-ஆம் ஆண்டு நவம்பர் 15-ஆம் தேதியன்று தூக்கிலிடப்பட்டார். இந்த நாளை இந்துமகா சபையினர் தியாக தினமாக அனுசரித்து அவரை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், மத்தியப்பிரதேசம் மாநிலம் குவாலியரில் உள்ள அகில பாரத இந்துமகா சபை அலுவலகத்தில் கோட்சேவிற்கு சிலை எழுப்பி, மாலை அணிவித்து, பூஜை செய்துள்ளனர்.
 
இந்து மகாசபையினரின் இந்த செயல் அங்கு சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. குவாலியர் மாவட்ட நிர்வாகம் கோட்சேவிற்கு கோயில் கட்ட அனுமதி தரமறுத்த நிலையில், இந்து மகாசபையினர் தங்களது அலுவலகத்தின் உள்ளேயே சிலை எழுப்பி நேற்று அவரது நினைவு தினத்தை அனுசரித்துள்ளனர். கோட்சே சிலை எழுப்பி, பூஜை செய்தவர்களை தேசத்துரோக வழக்கில் கைது செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments