Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோட்சேவிற்கு கோவில் கட்டி பூஜை: இந்துமகா சபை தடாலடி!

கோட்சேவிற்கு கோவில் கட்டி பூஜை: இந்துமகா சபை தடாலடி!

Webdunia
வியாழன், 16 நவம்பர் 2017 (14:11 IST)
தேசத்தந்தை எனப்போற்றப்படும் மகாத்மா காந்தியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேவிற்கு இந்துமகா சபையினர் கோவில் கட்டி பூஜை செய்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


 
 
கோட்சே, காந்தியைக் கொன்ற குற்றத்திற்காக 1949-ஆம் ஆண்டு நவம்பர் 15-ஆம் தேதியன்று தூக்கிலிடப்பட்டார். இந்த நாளை இந்துமகா சபையினர் தியாக தினமாக அனுசரித்து அவரை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், மத்தியப்பிரதேசம் மாநிலம் குவாலியரில் உள்ள அகில பாரத இந்துமகா சபை அலுவலகத்தில் கோட்சேவிற்கு சிலை எழுப்பி, மாலை அணிவித்து, பூஜை செய்துள்ளனர்.
 
இந்து மகாசபையினரின் இந்த செயல் அங்கு சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. குவாலியர் மாவட்ட நிர்வாகம் கோட்சேவிற்கு கோயில் கட்ட அனுமதி தரமறுத்த நிலையில், இந்து மகாசபையினர் தங்களது அலுவலகத்தின் உள்ளேயே சிலை எழுப்பி நேற்று அவரது நினைவு தினத்தை அனுசரித்துள்ளனர். கோட்சே சிலை எழுப்பி, பூஜை செய்தவர்களை தேசத்துரோக வழக்கில் கைது செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments