Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுபான்மை மக்கள் குடும்பக் கட்டுப்பாட்டை கடைபிடிக்கவேண்டும்… முதல்வர் பேச்சு!

Webdunia
வெள்ளி, 11 ஜூன் 2021 (11:48 IST)
அசாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வால் சிறுபான்மை மக்கள் கண்ணியமான குடும்ப கட்டுப்பாட்டைக் கடைபிடிக்க வேண்டுமென கூறியுள்ளார்.

அசாம் மாநில தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக கூட்டணியின் முதல்வராக ஹிமந்தா பிஸ்வால் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து நேற்று ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர்  ‘அனைத்து ஏழை மக்களுக்கும் அரசு பாதுகாவலராக இருக்கும். மக்கள் தொகை பெருக்கத்தைக் கடைபிடிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. மக்கள் தொகைதான் வறுமை, படிப்பறிவின்மை ஆகியவற்றுக்குக் காரணமாக உள்ளது. என்னுடைய அரசு சிறுபாண்மை பெண்களின் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும். சமூகத்தலைவர்கள் மக்களிடையே குடும்பக் கட்டுப்பாடு குறித்து பேசவேண்டும். கண்ணியமான குடும்பக் கட்டுப்பாட்டுக் கொள்கையைச் சிறுபான்மை சமூக மக்கள் கடைப்பிடிக்க வேண்டும்.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments