Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இமாச்சலபிரதேசத்தில் பேருந்து கவிழ்ந்து 20 பேர் பலி

Webdunia
புதன், 30 ஜூலை 2014 (07:55 IST)
இமாச்சலபிரதேச தலைநகர் சிம்லாவில் இருந்து சவெரகுட் நகருக்குச் சென்ற அரசுப் பேருந்து மலைப்பாதை வழியாக சென்றபோது பெரிய பள்ளத்தில் கவிழ்ந்ததில் 20 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்தால், சம்பவ இடத்திலேயே 20 பயணிகள் உடல் நசுங்கி பலியானார்கள். இதில் 17 பேரின் உடல் உடனடியாக மீட்கப்பட்டது. நொறுங்கிய பேருந்துக்குள் சிக்கிய 3 பேரின் உடல்கள் நீண்டநேரப் போராட்டத்திற்குப் பிறகு மீட்கப்பட்டது.

மேலும், 7 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிம்லாவில் உள்ள இந்திராகாந்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்கள் அனைவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது. பேருந்து கவிழ்வதற்கு முன்னதாக ஓட்டுநர் குதித்து விட்டதால் அவர் காயமின்றி உயிர் தப்பினார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை அம்மாநில முதலமைச்சர் வீரபத்ர சிங் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

Show comments