Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய- பாகிஸ்தான் எல்லை மூவர்ணக்கொடியில் ஹிட்டன் கேமரா: கதிகலங்கும் பாகிஸ்தான்!!

Webdunia
புதன், 8 மார்ச் 2017 (12:53 IST)
பஞ்சாப் மாநிலம் அட்டாரியில் இந்திய- பாகிஸ்தான் எல்லையில், நாட்டிலேயே மிகப் பெரியதாகக் கருதப்படும் மூவர்ணக்கொடி ஏற்றிவைக்கப்பட்டுள்ளது. 


 
 
இதுவரை, ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் 91.44 மீட்டர் உயரமுள்ள கம்பத்தில் பறக்கும் தேசியக் கொடியே, மிக உயரமான கம்பத்தில் பறக்கும் கொடியாகக் கருதப்பட்டது. 
 
ஆனால், தற்போது 120 அடி நீளமும், 80 அடி அகலமும் கொண்ட தேசியக்கொடியை பஞ்சாப் மாநில அமைச்சர் அனில் ஜோஷி ஞாயிற்றுக்கிழமை ஏற்றி வைத்தார். 
 
அட்டாரி எல்லையில் நடைபெறும் இந்திய- பாகிஸ்தான் ராணுவ வீரர்களின் அணிவகுப்பைக் காணவரும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில், பஞ்சாப் அரசின் சார்பில் ரூ.3.50 கோடி செலவில் இந்தக் கொடிக் கம்பம் அமைக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், இந்தியாவின் மிகப்பெரிய மூவர்ணக்கொடியில் கேமரா மறைத்து வைக்கப்பட்டு உள்ளது என பாகிஸ்தான் அச்சம் அடைந்து உள்ளது. மேலும், சர்வதேச எல்லையில் உளவு பணிக்காக இந்திய எல்லைப் பாதுகாப்பு படை மூவர்ணக்கொடியை பயன்படுத்தலாம் என பாகிஸ்தான் கவலை அடைந்து உள்ளது. 
 
ஆனால் மூவர்ணக்கொடியில் கேமரா எதுவும் மறைத்து வைக்கப்படவில்லை என இந்திய எல்லைப் பாதுகாப்பு படை அதிகாரி கூறி உள்ளார். 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசே தொடங்கிய ஓட்டுனர் பயிற்சி பள்ளி.. கார், பைக் ஓட்டும் பயிற்சிக்கு எவ்வளவு கட்டணம்?

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும்.! ராகுலுக்கு பறந்த உத்தரவு..!!

இன்று இரவு 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அப்பர் பெர்த் கழன்று விழுந்ததால் ரயில் பயணி பரிதாப பலி.. ரயில் பயணத்தில் பாதுகாப்பு இல்லையா?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எத்தனை பேர் போட்டி: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments