தொடர் மழையின் காரணமாக புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெற இருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் கனமழை பெய்து வருகிறது. இதனால், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், புதுச்சேரி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் பொறியியல், மருத்துவம், எம்.சி.ஏ. பாடப்பிரிவு தேர்வுகள் கனமழை காரணமாக, தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.