Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குஜராத்தை உருக்குலைத்த டவ்தேவ் புயல்: அதிர்ச்சி புகைப்படங்கள்

Webdunia
செவ்வாய், 18 மே 2021 (07:43 IST)
குஜராத்தை உருக்குலைத்த டவ்தேவ் புயல்: அதிர்ச்சி புகைப்படங்கள்
அரபிக் கடலில் உருவான டவ்தேவ் புயல் நேற்று இரவு குஜராத் மாநிலத்தை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறிய நிலையில் கோரத்தாண்டவம் ஆடி குஜராத் மாநிலத்தை கடந்துள்ளது 
 
குஜராத் மாநிலத்தில் உள்ள முக்கிய சாலைகள் உள்ள பல மரங்கள் வேரோடு கீழே விழுந்துள்ளது. மேலும் மின் கம்பங்களும் கீழே விழுந்த காட்சிகளை புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் ஆங்காங்கே சாலைகளில் தண்ணீரில் மூழ்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் குஜராத் மாநிலத்தில் டவ்தேவ் புயலால் ஏற்பட்ட சேதத்தை மீட்பு பணிகளை கவனிக்க மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் இந்த புயல் காரணமாக ஏற்பட்ட சேத மதிப்பீடு இன்னும் கணக்கிடப்படவில்லை என்றும் உயிர் சேதம் குறித்த மதிப்பு கணக்கீடு இன்னும் வெளிவரவில்லை என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே குஜராத் மாநிலம் கொரோனாவால் தத்தளித்துக் கொண்டிருக்கும் போது தற்போது புயலும் சேர்ந்து அம்மாநிலத்தை உருக்குலைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments