Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலைவலி, வாந்தி இருக்கா? இதுவும் கொரோனா அறிகுறி தானாம்..!

Webdunia
திங்கள், 6 ஜூலை 2020 (15:37 IST)
தலைவலி, வாந்தி, வயிற்றுப் போக்கு ஆகியவையும் கொரோனாவின் புது அறிகுறிகளாக பார்க்கப்படுகிறது. 
 
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் 10க்கும் அதிகமான இடத்தில் இருந்த இந்தியா கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நான்காவது இடத்துக்கு முன்னேறியது. 
 
அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா ஆகிய நாடுகளை அடுத்து நான்காவது இடத்தில் இருந்த இந்தியா தற்போது ரஷ்யாவில் பின்னுக்கு தள்ளிவிட்டு மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
தினந்தோறும் சுமார் 20 ஆயிரம் பேர்களுக்கும் மேலாக இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருவதே இந்த முன்னேற்றத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது. 
 
இந்நிலையில், காய்ச்சல், சளி, மூச்சுத்திணறல், வறட்டு இருமல் ஆகியவை இருந்தாலே கொரோனா வைரஸ் பரிசோதனை அவசியம் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது தலைவலி, வாந்தி, வயிற்றுப் போக்கு கெண்டைக்கால் பகுதியில் ஏற்படும் வலி, வயிற்றுவலி ஆகியவையும் கொரோனாவின் அறிகுறிகளாக மாறியுள்ளன.
 
இந்த அறிகுறிகளை உணர்ந்தால் நிச்சயம் கொரோனா பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை! திருத்தப்பட்ட அரசாணை வெளியீடு!

பூந்தமல்லி - போரூர் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்: விரைவில் 2-ம் கட்ட சோதனை..!

கூடாரத்தை கொழுத்திய இஸ்ரேல்! உடல் கருகி பலியான 23 பாலஸ்தீன மக்கள்! - தொடரும் சோகம்!

மதபோதகரை எரித்துக் கொன்ற சம்பவம்! குற்றவாளி விடுதலை! - கொண்டாடிய விஷ்வ ஹிந்து பரிஷத்!

திருமணமான 4 மாதத்தில் கணவனை பீர் பாட்டிலால் கொலை செய்த 17 வயது மைனர் மனைவி.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments