Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்ணை விட்டு விட்டு ஓடிய பலே கொள்ளையன்: மடக்கி பிடித்த போலீஸ்

Webdunia
செவ்வாய், 30 ஜூலை 2019 (18:55 IST)
ஆந்திராவில் பெண்ணை கடத்தி கொண்டு தப்பிய கொள்ளைக்காரன், மீண்டும் அந்த பெண்ணை விட்டுவிட்டு செல்லும்போது போலீஸில் சிக்கினான்.

ஆந்திராவில் உள்ள ஹயத்நகரை சேர்ந்தவர் யாதவய்யா. அந்த பகுதியில் டீ கடை நடத்தி வரும் இவருக்கு சோனி என்ற மகள் உள்ளார். சோனி அருகிலுள்ள கல்லூரியில் பி பார்ம் படித்து வந்திருக்கிறார். யாதவய்யாவுக்கு ரவி ஷங்கர் என்பவரோடு பழக்கம் ஏற்பட்டுள்ளது. ரவி ஷங்கர் தனக்கு நிறைய நிறுவனங்களை தெரியுமென்றும், அங்கே சோனிக்கு வேலை வாங்கி தருவதாகவும் கபட நாடகம் ஆடியுள்ளார். இதையறியாத யாதவய்யா தன் மகளை ரவிஷங்கரோடு அனுப்பி வைத்திருக்கிறார்.

அதற்கு பிறகு ரவிஷங்கர் போனை எடுக்கவேயில்லை. இதையடுத்து யாதவய்யா போலீஸில் புகார் அளித்தார். போலீஸின் கெடுபிடியான சோதனைகளிலிருந்து தப்ப முடியாது என்று உணர்ந்த ரவிஷங்கர் அத்தங்கி பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில் சோனியை விட்டிவிட்டு ஓடிவிட்டான்.

ரவிஷங்கரின் கார் எண்ணை வைத்து பல இடங்களிலும் தேடி வந்தனர் போலீஸ். இந்நிலையில் அந்தங்கி பகுதியில் ரவிசங்கர் டோல்கேட்டை கடந்து சென்றது போலீஸுக்கு தெரிய வந்தது. தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போலீஸ் ரவிஷங்கரை வளைத்து பிடித்து கைது செய்தனர். இவர் மேலும் பல இடங்களில் குற்ற செயல்களில் ஈடுப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments