Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆண் ஊழியர்களுக்கும் மகப்பேறு விடுமுறை: அரசு அதிரடி உத்தரவு

Webdunia
திங்கள், 4 ஜூன் 2018 (10:21 IST)
அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் பெண்களுக்கு மட்டுமே இதுவரை மகப்பேறு விடுமுறை அளிக்கப்பட்டு வந்த நிலையில் ஹரியானா மாநிலத்தில் ஆண்களுக்கும் மகப்பேறு விடுமுறை அளிக்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
 
பிறந்த குழந்தையை முதல் 15 நாட்களுக்கு தாயால் மட்டும் பராமரிப்பது கடினம் என்ற நிலையில் தற்போது ஹரியானாவில் பிறக்கும் குழந்தையை பராமரிப்பதற்காக அனைத்து அரசுத் துறையில் பணிபுரியும் ஆண் ஊழியர்களுக்கும் 15 நாள் மகப்பேறு விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் மனோகர் லால் அதிரடியாக உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். இருப்பினும் இது தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் இந்த விடுமுறை முதல் குழந்தைக்குக் மட்டுமா? அல்லது அடுத்தடுத்த பிறக்கும் குழந்தைகளுக்கும் உண்டா? என்பது குறித்த தகவல் இதுவரை இல்லை.
 
மேலும் ஹரியானா மாநிலத்தில்  பெண் போலீஸ் படைகளின் வலிமையை அதிகரிக்கும் வகையில் அவர்களின் எண்ணிக்கையை 11 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் முதல்வர் மனோகர் லால் தெரிவித்தார்...
 
 

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments