Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆண் ஊழியர்களுக்கும் மகப்பேறு விடுமுறை: அரசு அதிரடி உத்தரவு

Webdunia
திங்கள், 4 ஜூன் 2018 (10:21 IST)
அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் பெண்களுக்கு மட்டுமே இதுவரை மகப்பேறு விடுமுறை அளிக்கப்பட்டு வந்த நிலையில் ஹரியானா மாநிலத்தில் ஆண்களுக்கும் மகப்பேறு விடுமுறை அளிக்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
 
பிறந்த குழந்தையை முதல் 15 நாட்களுக்கு தாயால் மட்டும் பராமரிப்பது கடினம் என்ற நிலையில் தற்போது ஹரியானாவில் பிறக்கும் குழந்தையை பராமரிப்பதற்காக அனைத்து அரசுத் துறையில் பணிபுரியும் ஆண் ஊழியர்களுக்கும் 15 நாள் மகப்பேறு விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் மனோகர் லால் அதிரடியாக உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். இருப்பினும் இது தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் இந்த விடுமுறை முதல் குழந்தைக்குக் மட்டுமா? அல்லது அடுத்தடுத்த பிறக்கும் குழந்தைகளுக்கும் உண்டா? என்பது குறித்த தகவல் இதுவரை இல்லை.
 
மேலும் ஹரியானா மாநிலத்தில்  பெண் போலீஸ் படைகளின் வலிமையை அதிகரிக்கும் வகையில் அவர்களின் எண்ணிக்கையை 11 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் முதல்வர் மனோகர் லால் தெரிவித்தார்...
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments