Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஹரியானாவில் தலித் குழந்தைகளை எரித்த சம்பவம்: 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்தது சிபிஐ

ஹரியானாவில் தலித் குழந்தைகளை எரித்த சம்பவம்: 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்தது சிபிஐ
, வெள்ளி, 30 அக்டோபர் 2015 (05:51 IST)

ஹரியானாவில் தலித் குழந்தைகள் இரண்டு பேர் எரித்து கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக11 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


 


ஹரியானாவில் சில நாட்களுக்கு முன்பு தலித் குடும்பத்தினர் இருந்த குடிசை வீட்டை அப்பகுதியில் இருந்த சில உயர் வகுப்பை சேர்ந்தவர்கள் எரித்ததில், அதில் சிக்கி இரண்டு குழந்தைகள் பரிதபமாக பலியானர்கள். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது, மேலும் சில இடங்களில் இந்த சம்பவத்தை கண்டித்து போராட்டங்கள் நடைபெற்றது, இதனால் அம்மாநிலம் முதல்வர் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற உத்தரவிட்டார்.

இந்த வழக்கை சிபிஐ நேற்று விசாரணைக்கு ஏற்றதை தொடர்ந்து, அப்பகுதியில் இருக்கும் 11 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் சிபிஐ போலீஸார் சம்பவம் நடந்த பகுதிக்குச் சென்று தடயவியல் சோதனைகளை மேற்கொண்டனர்.


Share this Story:

Follow Webdunia tamil