Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹரியானாவில் தலித் குழந்தைகள் எரித்துக் கொலை: 4 பேர் கைது, 7 போலீசார் சஸ்பெண்ட்

Webdunia
புதன், 21 அக்டோபர் 2015 (13:08 IST)
ஹரியானாவில் 2 தலித் குழந்தைகள் உயிரோடு எரித்துக் கொலை செய்யப்பட்ட வி்வகாரத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 7 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.


 
 
ஹரியானா மாநிலம் பரிதாபாத்தில் உள்ள சோன்பேட்டில் தான் இக்கோரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. சம்பவ தினத்தன்று தலித் வீடுகளின் மீது உயர் ஜாதி பிரிவைச் சேர்ந்தவர்கள் பெட்ரோல் ஊற்றி தீவைத்தனர்.
 
இதில் அந்த வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த  வைபவ் என்ற இரண்டரை வயது குழந்தையும், திவ்யா என்ற 11 மாத குழந்தையும் உயிரிழந்தது. குழந்தைகளின் தயார் ரேகா 70 சதவீதம் தீக்காயம் அடைந்த நிலையில் டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
 
இச்சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். 7 போலீசார் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

தயிர் வியாபாரியிடம் பணம் பறித்த விவகாரம்: சிறப்பு உதவி ஆய்வாளர் கைது..!

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

Show comments