Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

2014 ஆம் ஆண்டு 18 கெளரவக் கொலைகள் நாட்டில் நடந்துள்ளது

2014 ஆம் ஆண்டு 18 கெளரவக் கொலைகள் நாட்டில் நடந்துள்ளது
, புதன், 4 மார்ச் 2015 (17:18 IST)
கடந்த 2014ஆம் ஆண்டில் மட்டும் ஒட்டு மொத்தமாக 18 கௌரவக் கொலைகள் நடந்திருப்பதாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
 
உள்துறை அமைச்சகத்தின் இணை அமைச்சர் ஹரிபாய் பாரதிபாய் சௌதாரி இன்று பேசுகையில், தேசிய குற்றப் பதிவுக் கழகம் அளித்த தகவலின்படி, கடந்த 2014 ஆம் ஆண்டு  ஜனவரி மாதம் முதல் 18 கௌரவக் கொலைகள் நடந்திருப்பதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு முந்தைய மூன்று ஆண்டுகளுக்கான விவரங்கள் கிடைக்கவில்லை என்று பதில் அளித்தார்.
 
வேறு மதத்தைச் சேர்ந்தவர்களை தங்களது பிள்ளைகள் காதலித்தால், கௌரவத்தைக் காப்பாற்றுவதாகக் கூறி, பிள்ளைகளைக் கொலை செய்யும் கொடூரச் செயலே கௌரவக் கொலை என்று கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil