Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

6 மாதங்களுக்கு பிறகு தாய் மண்ணில் கால் பதிக்கும் ஹர்திக் பட்டேல்

6 மாதங்களுக்கு பிறகு தாய் மண்ணில் கால் பதிக்கும் ஹர்திக் பட்டேல்
, செவ்வாய், 17 ஜனவரி 2017 (11:50 IST)
பட்டேல் இன மக்களுக்காக இட ஒதுக்கீடு தொடர்பாக போராட்டங்கள் நிகழ்த்தி சிறை சென்ற ஹர்திக் பட்டேல் 6 மாதங்களுக்கு பிறகு தனது தாய்மண் குஜராத்துக்குள் நுழைகிறார்.


 

 
குஜராத் மாநிலத்தில் பட்டேல் இன மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றில் உரிய இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று ஹர்திக் பட்டேல் ஏராளமான மக்களை திரட்டி போராட்டம் நடத்தினார். இதனால் காவல்துறையினர் அவரை கைதுச் செய்தனர். அதோடு அவர்மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சூரத்தில் உள்ள சிறையில் ஒன்பது மாதங்கள் மாதங்களாக இருந்தார். 
 
கடந்த ஆண்டு ஜுலை மாதம் 17ஆம் தேதி ஹர்திக் பட்டேல், ஆறு மாத காலத்திற்கு குஜராத் பகுதிக்குள் நுழைய கூடாது என்ற நிபந்தனையுடன் சிறையில் இருந்து வெளிவந்தார். இதையடுத்து ராஜஸ்தான் மாநிலம், உதய்பூர் மாவட்டத்தில் அவர் தங்கி இருந்தார். ஆறு மாத காலம் முடிவடைந்துள்ள நிலையில் இன்று அவரது தாய் மண் குஜராத்தில் காலடி எடுத்து வைக்கிறார். 
 
ராஜஸ்தான் மாநிலம் வழியாக குஜராத் நுழையும் ஹிர்திக் பட்டேலை வரவேற்க பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குடிபோதையில் 5 வயது மகனை கத்தியால் குத்திய தந்தை!!