Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஓணத்திற்கு வாழ்த்து தெரிவித்த அன்புமணி

ஓணத்திற்கு வாழ்த்து தெரிவித்த அன்புமணி
, ஞாயிறு, 30 ஆகஸ்ட் 2015 (23:35 IST)
மலையாள மக்களின் பண்டிகையான ஓணம் பண்டிக்கைக்கு பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து, பாமக இளைஞரணித் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி, தனது முகநூல் பக்கத்தில், Wishing my friends from Kerala "A Very Happy Onam to You and Your Family!"
 
சிறப்பு மிக்க ஓணம் பண்டிகையை இன்று கொண்டாடும் மலையாள மொழிபேசும் மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். ஆனால், அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இது போன்ற வாழ்த்து செய்தியை வெளியிடவில்லை.
 
பாமக எப்போதும், தமிழ் மற்றும் தமிழ்நாடு குறித்தவைகளுக்குத்தான் முக்கியத்துவம் தரும். தற்போது, அதையும் தாண்டி, மலையாள மக்களுக்கு ஓணம் வாழ்த்துச் சொல்லி தனது பாதையை மாற்றியுள்ளது என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
 
ஆக, பாமக இனி வரும் காலத்தில், அனைத்துதரப்பு மக்களும் அனுசரித்துச் செல்ல வேண்டும் என விரும்புகின்றது என்பது இதில் இருந்தே தெரிய வருகிறது. 
 

Share this Story:

Follow Webdunia tamil