Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குஜராத்தில் விழுந்தது வட்டவடிவ விண்கற்களா? பொதுமக்கள் பீதி

Webdunia
வியாழன், 1 ஜூன் 2017 (05:23 IST)
குஜராத் மாநிலத்தில்,நேற்று திடீரென பெய்த ராட்சத மழையின் நடுவே ஆங்காங்கே ஆலங்கட்டி விழுந்தது. ஆனால் இந்த ஆலங்கட்டியில் ஒருசில கற்கள் வட்ட வடிவில் விண்கற்கள் போல் இருந்ததால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.



 


குஜராத் மாநிலத்தின் மிகப்பெரிய தொழில் நகரமான சூரத் அருகே உள்ள மாந்த்வி என்ற பகுதியில் நேற்று சுமார் இரண்டு மணி நேரம் ஆலங்கட்டி மழை பெய்தது. இதன்போது, விண்ணில் இருந்து கற்கள் விழுவதைப் போல பலத்த சத்தத்துடன் ஆலங்கட்டிகள் வீட்டின் கூரைகள் மேல் விழுந்ததால்  தட தடவென பெரும் சத்தமும் ஏற்பட்டது. இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் யாரும் வெளியே வரவில்லை

விண்ணில் இருந்து விழுந்த வட்ட வடிவ கற்கள் விண்கற்கள் போல் இருந்தததால் அந்த கற்களை ஆய்வு செய்ய அதிகாரிகள் முடிவு செய்தனர். மேலும் இதுபோன்ற நேரத்தில் மக்கள் வெளியே வரவேண்டாம் என்றும் அவர்கள் அறிவுறுத்தினர். ஆப்பிரிக்க நாடுகளில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இதேபோன்று வட்டவடிவ கற்கள் விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

சஹாரா க்ரூப்ஸை குறிவைத்த Scam 2010 வெப் சிரிஸ்! – வழக்கு தொடர்வோம் என எச்சரிக்கை!

கூட்ட நெரிசலில் இறந்தாரா? கொலையா? செண்ட்ரல் வந்த ரயிலில் அழுகி கிடந்த ஆண் சடலம்!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை.. மகிழ்ச்சியில் பொதுமக்கள்..!

குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலந்த விவகாரம்: சிபிசிஐடி வழக்குப்பதிவு

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான ஈரான் அதிபர் என்ன ஆனார்? 12 மணி நேரமாக மீட்பு பணி..!

அடுத்த கட்டுரையில்
Show comments