Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடி வாங்கி வந்ததே திருட்டு சிலைதான்? அடுத்த ரவுண்டுக்கு எச்.ராஜா ரெடி போல...

Webdunia
வியாழன், 4 அக்டோபர் 2018 (17:02 IST)
எச்.ராஜா எப்போதும் சர்சையான கருத்துக்களை வெளியிட்டு சிக்கலில் சிக்கிகொள்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். சமீபத்தில் கூட நீதிமன்றத்தையும், காவல்துறையையும் பற்றி அவதூறாக பேசி பிரச்சனையில் மாட்டிக்கொண்டார். 
 
இந்நிலையில், அவர் தற்போது கூறியுள்ள கருத்து மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் டோனி அப்பாட் கடந்த 2014 செப்டம்பர் மாதம் இந்தியா வந்த போது மோடிக்கு இரண்டு சிலைகளை பரிசளித்தார். 
 
இதில் எச்.ராஜா தற்போது கூறுவது என்னவென்றால், பிரதமர் மோடிக்கு ஆஸ்திரேலிய பிரதமர் பரிசளித்த நடராஜர் சிலை தமிழகத்தில் இருந்து கடத்தப்பட்ட சிலையே, அதைத்தான் மோடி பரிசாக வாங்கிக்கொண்டார் என தெரிவித்துள்ளார். 
 
இதனால், வழக்கம் போல் இணையவாசிகள் அவரை விமர்சிக்க துவங்கியுள்ளனர். அதாவது, எச்.ராஜா சொல்லிவிட்டார் மோடி மீதும், ஆஸ்திரேலிய பிரதமர் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கேலி செய்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எடப்பாடி பழனிசாமி கை நீட்டுபவர் தான் பிரதமராக வருவார்: ஆர்.பி.உதயகுமார் பேட்டி

திரௌபதி அம்மன் கோவிலில் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!

மனைவியை குழி தோண்டி புதைத்த கணவர்.! வீடியோ கால் பேசியதால் கொலை.!!

நிலம் சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் போலீஸ் பாதுகாப்புடன் வருவாய்த்துறையினர் நிலத்தை அளவீடு செய்ய வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதா

பாலியல் புகார்..!மருத்துவமனைக்குள் சென்ற காவல் வாகனம்..! நோயாளிகள் அதிர்ச்சி..!!

அடுத்த கட்டுரையில்
Show comments