Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வந்தா ஐபிஎஸ் அதிகாரியா வருவேன்! – சபதம் எடுத்த குஜராத் ‘பெண் சிங்கம்’

Webdunia
வியாழன், 16 ஜூலை 2020 (15:17 IST)
குஜராத்தில் அமைச்சர் மகனுடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்துள்ள பெண் காவலர், தான் ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக திரும்ப வருவதாக தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலத்தில் சில நாட்களுக்கு முன்பு ஊரடங்கை மீறி நள்ளிரவில் வெளியே சுற்றிய மந்திரியின் மகனை பெண் காவலர் சுணிதா தடுத்து நிறுத்திய சம்பவம் வைரலானது. இதற்காக அவரை தலைமை செயலகத்துக்கு பணியிட மாற்றம் செய்த நிலையில், அவர் தனது பணியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

மந்திரி மகனுடனான அவரது வாக்குவாதம் இணையத்தில் வைரலான நிலையில், அரசியல் பலம் உள்ளதை கண்டு அஞ்சாமல் அவர் நடந்து கொண்டதை பாராட்டி பலர் அவரை ‘லேடி சிங்கம்’ என்ற பெயரில் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்துள்ளனர்.

இந்நிலையில் தனது பணியை ராஜினாமா செய்துள்ள சுனிதா தான் ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக மீண்டும் வர விரும்புவதாக கூறியுள்ளார். ஒருவேளை ஐபிஎஸ் தேர்வில் தேர்ச்சியடையாவிட்டாலும், மக்களுக்கு உதவும் வகையில் ஒரு வழக்கறிஞராகவோ அல்லது ஊடகவியலாளராகவோ மாற விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

அதானி நிறுவனத்திற்கு முதலீடு கிடையாது! நார்வே எடுத்த அதிரடி முடிவு! – காரணம் என்ன தெரியுமா?

மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால் பிளான் B என்ன? அமித்ஷா அளித்த அதிரடி பதில்..!

உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு உத்தரவு

அடுத்த கட்டுரையில்
Show comments