Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவமனையில் தீ விபத்து; 8 பேர் பலி! – குஜராத்தில் சோகம்!

Webdunia
வியாழன், 6 ஆகஸ்ட் 2020 (08:46 IST)
குஜராத்தில் கொரோனாவுக்கு சிகிச்சையளித்து வந்த மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டதால் 8 பேர் இறந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருகின்றன. இதனால் பல ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் உள்ள ஷ்ரே மருத்துவமனையிலும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை மின்கசிவு காரணமாக மருத்துவமனையில் திடீரென தீப்பற்றியுள்ளது. அதிகாலை நேரம் என்பதால் அனைவரும் தூக்க கலகத்தில் இருந்ததால் நிலவரம் புரிந்து செயல்படுவதற்கு முன்னராக தீ வேகமாக பரவியுள்ளது. இதனால் 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாயினர். இந்த சம்பவம் குஜராத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments