Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குஜராத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள் ஒத்திவைப்பு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

குஜராத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள் ஒத்திவைப்பு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
, திங்கள், 5 அக்டோபர் 2015 (04:21 IST)
குஜராத் மாநிலத்தில், சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுள்ளதால், உள்ளாட்சி மன்றத் தேர்தல்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
 

 
குஜராத் மாநிலத்தில், படேல்  சமூக மக்கள் இடஒதுக்கீடு கோரி தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், மாநிலத்தில், சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அம் மாநிலத்தில், நகராட்சி, பஞ்சாயத்து தேர்தல்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிப்பை மாநில  தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
 
மேலும், குஜராத் மாநிலத்தில், சட்டம், ஒழுங்கு நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும், இதனையடுத்து, மாநகராட்சி, நகராட்சி மற்றும் உள்ளாட்சித்  தேர்தல்கள் அடுத்த மூன்று மாதங்களுக்குள் நடைபெறும் என்றும் அம்மாநில தேர்தல் ஆணைய செயலாளர் மகேஷ் ஜோஷி அறிவித்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil