Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தலை புறக்கணிக்கும் 18 கிராமங்கள்: குஜராத்தில் பாஜகவுக்கு சிக்கல்?

Webdunia
திங்கள், 14 நவம்பர் 2022 (14:44 IST)
குஜராத் மாநிலத்தில் டிசம்பர் 1 மற்றும் டிசம்பர் 5 ஆகிய இரண்டு நாட்கள் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில் திடீரென 18 கிராமங்கள் தேர்தலை புறக்கணிக்க இருப்பதாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
குஜராத் மாநிலத்தில் பாஜக காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி ஆகிய மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ள நிலையில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க பாஜக  தீவிர முயற்சி செய்து வருகிறது 
 
இந்த நிலையில் குஜராத் மாநிலத்தில் உள்ள நவ்சாரி என்ற தொகுதிக்கு உட்பட்ட 18 கிராமங்களை சேர்ந்த மக்கள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். தங்கள் கிராமங்களுக்கு அருகில் உள்ள அஞ்செலி என்ற ரயில் நிலையத்தில் ரயில்களை நிறுத்த கோரி நீண்ட வருடங்களாக கோரிக்கை விடுத்து வருவதாகவும் ஆனால் மாநிலத்தில் உள்ள பாஜக அரசு மத்தியில் உள்ள பாஜக அரசும் தங்கள் கோரிக்கையை நிறைவேற்றாததால் தேர்தலை புறக்கணிக்க இருப்பதாக தெரிவித்துள்ளனர் 
 
இந்த 18 கிராம மக்களும் இதுநாள்வரை பாஜகவுக்கு ஓட்டளித்து வந்தவர்கள் என்பதால் பாஜகவுக்கு இந்த தொகுதியில் பெரும் பின்னடைவு ஏற்படும் என்று கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments