Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொழில்நுட்ப கோளாறால் ஜி.எஸ்.எல்.வி. எஃப்-10 ஒத்திவைப்பு..

Arun Prasath
புதன், 4 மார்ச் 2020 (17:25 IST)
இஸ்ரோவால் நாளை விண்ணில் செலுத்துவதாக திட்டமிட்டருந்த, கண்காணிப்பு செய்ற்கைக்கோளை ஏந்தி செல்லும் ஜி.எஸ்.எல்.வி. எஃப்-10  , தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்தும் விதத்தில் 10 கண்காணிப்பு செய்றகைக்கோள்களை விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டது. அதன் படி பருவநிலை கண்காணிப்பு மற்றும் பேரிடர் மீட்புப் பணிகளுக்கு உதவும் வகையில் ரூ.800 கோடி மதிப்பீட்டில் 2 அதிநவீன ஜியோ இமேஜிங் செயற்கை கோள்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இதன் முதல் கட்டமாக புவியை கண்காணிக்கவும், வானிலை ஆய்வுகளுக்காகவும் உதவும் வகையில் ஜி-சாட்-1 செயற்கைக்கோள், வருகிற மார்ச் 5 ஆம் தேதி, மாலை 5.43 மணிக்கு, ஜிஎஸ்எல்வி.-எஃப்10 ராக்கெட் மூலம், ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து விண்ணில் செலுத்தப்படவுள்ளதாக இஸ்ரோ அறிவித்தது.

இந்நிலையில் தற்போது நாளை விண்ணில் செலுத்துவதாக திட்டமிடப்பட்டிருந்த ஜி.எஸ்.எல்.வி. எஃப்-10 ராக்கெட், தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments