Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பெண் பயணியை ஓடும் ரயிலில் இருந்து தள்ளிய ரயில்வே போலிசார்

பெண் பயணியை ஓடும் ரயிலில் இருந்து தள்ளிய ரயில்வே போலிசார்
, திங்கள், 12 அக்டோபர் 2015 (17:23 IST)
பெஹரம்பூரில் ஓடும் ரயிலில் இருந்து பெண் பயணியை கீழே தள்ளிய ரயில்வே போலிசாரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
 
ரமேஷ் கிரி(39) என்பவர் தன் மனைவி நேசா கிரி(34) வுடன் டீஸ்டா டோர்சா எக்ஸ்பிரசில் அஜிம்கான் என்ற இடத்திலிருந்த்து முர்சிதாபத் என்ற இடத்திற்கு நேற்று இரவு சென்று கொன்றிருந்த்தார்.
 
அப்போது அங்கு வந்த டிக்கெட் பரிசோதகர் மற்றும் ரயில்வே போலிஸ் அதிகாரி ஒருவருக்கும் ரமேஷ்கிரிக்கும் இடையே வாக்குவாதம்  ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த அந்த காவல் அதிகாரி, ரமேஷின் மனைவி நீசாவை ஒடும் ரயிலிலிருந்து கீழே தள்ளியிருக்கிறார்.
 
இதில் படுகாயம் அடைந்த நீசா தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். மனைவியை கீழே தள்ளிவிட்ட அந்த காவல் அதிகாரி மீது ரமேஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil