Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொத்து மதிப்பில் முதல்வரை மிஞ்சிய பேரன்

Webdunia
வியாழன், 20 அக்டோபர் 2016 (13:20 IST)
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஒவ்வொரு ஆண்டும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவருடைய சொத்து மதிப்புகளை வெளியிட்டு வருகிறார். தற்போது சந்திரபாபு நாயுடு பேரன் சொத்து மதிப்பில் அவரை மிஞ்சி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


 

 
ஆந்திரா மாநிலம் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஒவ்வொரு ஆண்டும் தனது சொத்து மதிப்பு மற்றும் குடும்ப உறுப்பினர்களின் சொத்து மதிப்பு ஆகியவற்றை வெளியிட்டு வருகிறார்.
 
8வது ஆண்டாக சொத்து மதிப்பு விவரத்தை சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷ் வெளியிட்டார்.
 
சந்திரபாபு நாயுடு சொத்து மதிப்பு ரூ.3.73 கோடி உள்ளது. அதில் ரூ.3.06 கோடி வங்கியில் கடன் வாங்கியுள்ளார். அதன்படி அவரது சொத்து மதிப்பு ரூ.67 லட்சம். அவரது மனைவியின் சொத்து மதிப்பு ரூ. 24.84 கோடி, மருமகள் சொத்து மதிப்பு ரூ.12.33 கோடி, மகன் சொத்து மதிப்பு ரூ.8.15 கோடி.
 
சந்திரபாபு நாயுடு பேரன் தேவன்ஷ் சொத்து மதிப்பு ரூ. 11.32 கோடி. இந்த வகையில் தேவன்ஷ் சொத்து மதிப்பில் தனது தாத்தாவையே மிஞ்சி விட்டார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறுமி வன்கொடுமை, கொலை! கும்பமேளா சென்ற குற்றவாளி! சேஸ் செய்து பிடித்த போலீஸ்!

வெளிமாநிலத்தவர்கள் நிலம் வாங்க தடை.. உத்தரகாண்ட் மாநிலத்தில் புதிய சட்டம்..!

உதயநிதி சரியான ஆளாக இருந்தால் "Get Out Modi" என்று சொல்லி பார்க்கட்டும்: அண்ணாமலை

அண்ணாமலைக்கு தில் இருந்தா அண்ணாசாலைக்கு வர சொல்லுங்க! - உதயநிதி ஸ்டாலின் சவால்!

இந்தியாவில் டெஸ்லா ஆலை அமைக்க டிரம்ப் எதிர்ப்பு.. முதல் முறையாக கருத்து வேறுபாடா?

அடுத்த கட்டுரையில்
Show comments