1 லட்ச ரூபாய் செல்போனுக்காக அணை தண்ணீரை பம்புசெட் போட்டு வெளியேற்றிய அதிகாரி..!

Webdunia
வெள்ளி, 26 மே 2023 (17:17 IST)
ஒரு லட்ச ரூபாய் செல்போன் அணையில் விழுந்து விட்டதை அடுத்து அந்த செல்போனை எடுப்பதற்காக அணையில் உள்ள தண்ணீரை பம்பு செட் போட்டு வெளியேற்றிய அரசு அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
 
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள கான்கேர் மாவட்டத்தில் கேர்கட்டா  என்ற அணைக்கு அரசு அதிகாரி ராஜேஷ் விசுவாஸ் என்பவர் சென்றபோது அவரது மொபைல் போன் அணையில் தவறி விழுந்து விட்டது. ரூபாய் ஒரு லட்சம் மதிப்பிலான அந்த செல்போனை எடுப்பதற்காக மூன்று நாட்களாக அணையில் இருந்து பம்பு செட் மூலம் அவர் தண்ணீரை வெளியேற்றியுள்ளதாக தெரிகிறது. 
 
இதன் மூலம் 21 லட்சம்  தண்ணீர் வெளியேற்றியதாக அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர் கடைசியில் செல்போன் கிடைத்த போதிலும் அது வேலை செய்யவில்லை என்று கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் அணையில் இருந்த 21 லட்சம் தண்ணீரை வீணாக்கிய அரசு அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்த நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுப்பது உறுதி என சத்தீஸ்கர் மாநில அமைச்சர் அபரஜித் உறுதி கூறியுள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

சென்னையின் முக்கிய திட்டத்திற்கு ரூ.200 கோடி கொடுத்த ஸ்ரீ சத்ய சாயி பாபா அறக்கட்டளை..!

தெற்கு வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு: 48 மணி நேரத்தில் தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி

அடுத்த கட்டுரையில்
Show comments