Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வருமானவரியை இன்னும் கணக்கை தாக்கல் செய்யவில்லையா? கவலை வேண்டாம்

Webdunia
வியாழன், 26 ஜூலை 2018 (18:33 IST)
வருமான வரி தாக்கல் செய்பவர்கள் இம்மாதம் 31ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் இல்லையேல் ரூ.5000 வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது வருமானவரி கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் வருமான வரி தாக்கல் செய்பவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
 
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் மார்ச் வரையிலான வருமானத்திற்கான வருமான வரியை ஜூலை மாதத்திற்குள் தாக்கல் செய்து வரியை கட்டி முடிக்க வேண்டும். அந்த வகையில் இந்த ஆண்டும் வருமான வரியை ஜூலை 31ஆம் தேதிக்குள் தாக்கல் செய்து ரூ.5000 அபராதத்தை தவிர்க்குமாறு வருமான வரித்துறையினர் கேட்டுக்கொண்டு வந்தனர்.
 
இந்த நிலையில் சற்றுமுன் வெளியான அறிவிப்பின்படி வருமான வரியை தாக்கல் செய்ய வரும் ஆகஸ்டு 31-ந்தேதி வரை நீட்டித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இன்னும் ஒருமாத கால அவகாசம் இருப்பதால் வருமான வரி தாக்கல் செய்பவர்கள் பொறுமையாக தாக்கல் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments