Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு ரூபாய்க்கு நேப்கின் – மத்திய அரசு புதிய திட்டம் !

Webdunia
புதன், 28 ஆகஸ்ட் 2019 (09:37 IST)
பெண்களின் சுகாதாரத்துக்காக ஒரு ரூபாய்க்கு நாப்கின் விற்கும் திட்டத்தை நேற்று தொடங்கிவைத்தார் மத்திய அமைச்சர் சதானந்த கவுடா.

மாதவிடாய்க் காலங்களில் நகர்ப்புறங்களைச் சேர்ந்த 78 சதவிகித பெண்கள் மட்டுமே சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்துகின்றனர் என 2016ல் தேசிய சுகாதார கணக்கெடுப்பின் போது அறிவிக்கப்பட்டது. கிராமப்புறத்திலோ வெறும் 48 சதவீதம் பேரே பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதற்கு முக்கியக்காரணமாக நாப்கின்களின் விலை அதிகமாக இருப்பதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில் மத்திய அரசின் ஜன் அவ்சதி கேந்திரா மருந்துக் கடைகளில் ஒரு ரூபாய்க்கு நாப்கின்கள் விற்பனை செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. முன்னதாக 4 நாப்கின்கள் கொண்ட பாக்கெட் 10 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் இப்போது அது 4 ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது. உள்ள 5500 ஜன் அவ்சதி கேந்திரா மருந்துக் கடைகளில் இந்த நாப்கின்கள் கிடைக்கும் என்று மத்திய ரசாயன மற்றும் உரங்களுக்கான அமைச்சர் மன்சுக் மந்தாவியா தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments