Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மேஜிக் மூலம் தங்கச்சங்கிலி வரவழைத்த சாமியார் : வீடியோ

மேஜிக் மூலம் தங்கச்சங்கிலி வரவழைத்த சாமியார் : வீடியோ
, செவ்வாய், 9 பிப்ரவரி 2016 (14:16 IST)
மராட்டிய மாநில முதலமைச்சரின் மனைவிக்கு, ஆசி வழங்கிய ஒரு சாமியார் மேஜிக் மூலம், காற்றில் மூலம் தங்க சங்கிலியை வரவழைத்துக் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.


 

 
மராட்டிய மாநிலம் புனேவில் நடைபெற்ற விழாவில் கோவிந்தானந்த்  சுவாமிகள் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த அந்த மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸின் மனைவி அம்ருதா பட்னாவிஸ்,  சுவாமியிடம் ஆசி வாங்க சென்றார்.
 
அப்போது அவர் மந்திரத்தின் மூலம் காற்றில் தங்க சங்கிலியை வரவழைத்து அம்ருதாவின் கழுத்தில் அணிவித்தார். அவரும் சுவாமியின் காலை தொட்டு ஆசிர்வாதம் வாங்கினார். 
 
இந்த சம்பவம் அங்கு சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. மராட்டிய மாநில மூடநம்பிக்கைகளின் ஒழிப்பு குழுவின் தலைவர் அவினாஷ் பாட்டீல் இதுபற்றி கருத்து தெரிவித்த போது “முதலமைச்சர்  தேவேந்திர பட்னாவிஸ் இதுபற்றி விளக்கம் அளிக்க வேண்டும். தேவைபட்டால் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். கட்டுபாடு உள்ள நிலையில் எங்கள் முன், இது போன்ற அதிசயத்தை அந்த சாமியார் நிகழ்த்தி காட்டினால் அந்த சாமியாருக்கு நாங்கள் ரூ.21 லட்சம் பரிசாக வழங்க தயாராக இருக்கிறோம் என்று கூறினார்.
 
இதுபற்றி கருத்து தெரிவித்த அம்ருதா “இதுபோன்ற செயல்களில் எனக்கும் நம்பிக்கை இல்லை. தகுந்த பயிற்சியிருந்தால் யார் வேண்டுமானாலும் இதை செய்ய முடியும். வயதானவர் என்பதால் அவரிடம் ஆசி பெற்றேன் அவ்வளவுதன்” என்று கூறியுள்ளார்.
 

Courtesy : www.abpmajha.in

Share this Story:

Follow Webdunia tamil