Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 மாநில ஆளுநர்கள் மாற்றம்: ஜனாதிபதி திரௌபதி முர்மு உத்தரவு..!

Siva
புதன், 25 டிசம்பர் 2024 (07:24 IST)
தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளா உள்பட ஐந்து மாநில ஆளுநர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் இதுகுறித்த உத்தரவை ஜனாதிபதி திரௌபதி முர்மு பிறப்பித்து உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன

கேரளா, பீகார், ஒடிசா, மணிப்பூர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் பொறுப்பேற்கின்றனர். இதன் அடிப்படையில், ஒடிசா ஆளுநராக இருந்த ரகுபர் தாஸ் தனது பதவியை ராஜினாமா செய்ததை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஏற்றுக்கொண்டார். மேலும், மிசோரம் ஆளுநராக இருந்த ஹரிபாபு, ஒடிசாவின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் ராணுவ தளபதி விகே. சிங் மிசோரம் ஆளுநராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கேரளாவின் தற்போதைய ஆளுநர் ஆரிப் முகமது கான் பீகாருக்கு மாற்றப்பட்டுள்ளார். அதேவேளையில், பீகார் ஆளுநர் ராஜேந்திர அர்லேகர், கேரளாவின் புதிய ஆளுநராக மாற்றப்பட்டுள்ளார்.

மணிப்பூருக்கு, முன்னாள் உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்புகள் குடியரசுத் தலைவர் மாளிகை சார்பில் வெளியிடப்பட்டுள்ளன.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வார்னிங் எல்லாம் கிடையாது, ஜஸ்ட் போர்டு மட்டும் தான்.. ஜிலேபி, பக்கோடா குறித்து அரசு விளக்கம்..!

அர்ச்சனா கொடுத்த கிரிப்டோகரன்சி முதலீடு ஐடியா.. காதலியை நம்பிய பெங்களூரு நபரிடம் ரூ.44 லட்சம் மோசடி..!

மும்பை பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்ட.. பினராயி விஜயன் பெயரில் வந்த இமெயில்..!

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுட்டு கொலை.. தப்பிக்க முயன்றவர் மீது மிளகாய்ப்பொடி தூவிய மர்ம நபர்கள்..!

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி.. நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments