Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக வட்டச் செயலாளர் போல செயல்படும் ஆளுநர்: முதல்வர் பகிரங்க குற்றச்சாட்டு!

பாஜக வட்டச் செயலாளர் போல செயல்படும் ஆளுநர்: முதல்வர் பகிரங்க குற்றச்சாட்டு!

Webdunia
புதன், 5 ஜூலை 2017 (12:57 IST)
இந்தியாவின் அதிரடியான முதல்வர்களில் ஒருவரான மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அம்மாநில ஆளுநர் கேசரி நாத் திரிபாதி மீது பகிரங்க குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.


 
 
மேற்குவங்கத்தில் உள்ள பர்கானாஸ் மாவட்ட பதுரியாவில் மத மோதல்கள் நடந்துள்ளது. இது குறித்து அம்மாநில பாஜகவினர் ஆளுநர் திரிபாதியை சந்தித்து முறையிட்டனர். இதனையடுத்து ஆளுநர் திரிபாதி முதல்வர் மம்தா பானர்ஜிக்கு போன் போட்டு பேசியதாக கூறப்படுகிறது.
 
இதனையடுத்து தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் மம்தா பானர்ஜி, ஆளுநர் என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு மிரட்டினார். பாஜகவுக்கு ஆதரவாக முறையில் அவர் பேசிய விதத்தால் அவர் என்னை அவமானப்படுத்திவிட்டார்.
 
இதுபோன்று என்னிடம் பேச வேண்டாம் என்று ஆளுநரிடம் நான் கூறிவிட்டேன். அவர் பாஜகவின் வட்டச் செயலாளர் போல செயல்படுகிறார். அவர் சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து பெரிதாக பேசுகிறார். அவர் சட்டத்தினால் ஆளுநர் பதவிக்கு வந்தவர். நான் மக்களால் தேர்தெடுக்கப்பட்டு முதல்வர் பதவிக்கு வந்துள்ளேன். அவர் தனது பதவியின் மாண்பை புரிந்து நடக்க வேண்டும் என்றார் மம்தா.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

அண்ணாமலை திறமையை தேசிய அளவில் பயன்படுத்துவோம்: அமித்ஷாவின் ட்வீட்..!

ஈபிஎஸ் தலைமையில் கூட்டணி.. அதிகாரபூர்வமாக அறிவித்த அமித்ஷா..!

பணத்தை நான் தான் திருடினேன்.. 6 மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவேன்: திருடன் எழுதிய கடிதம்..!

அமித்ஷாவை சந்தித்தே ஆக வேண்டும்: ஆட்டோவில் வந்த அகோரியால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments