Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி ராணுவ அதிகாரத்தை பாதிக்குமா?

Webdunia
புதன், 20 ஜூன் 2018 (21:28 IST)
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆட்சி செய்து வந்த மக்கள் ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை பாரதிய ஜனதா கட்சி நேற்று திடீரென வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து முதல்வர் மெகபூபா முப்தி ராஜினாமா செய்தார்.
 
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் ஆளுனர் ஆட்சி அமலுக்கு வந்தது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அங்கு ஆளுனர் ஆட்சிக்கு ஒப்புதல் வழங்கியுள்ளார். ஆளுனர் ஆட்சி ஆறு மாத காலத்திற்கு இருக்கும் என்றும், அதற்குள் புதிய அரசு அமைய முயற்சி எடுத்தால் ஆளுனர் ஆட்சி விலக்கிக் கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ஆளுநர் ஆட்சி அமைக்கப்பட்டுள்ளதால் ராணுவ அதிகாரத்தில் ஏதேனும் பிரச்சனை ஏற்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், ராணுவ தளபதி பிபின் ராவத் இது குறித்து கூறியுள்ளார். 
 
தற்போது ஏற்பட்டுள்ள ஆளுநர் ஆட்சியால் பங்கரவாதத்துக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளில் எவ்வித பாதிப்பும் இருக்காது. இதுவரை எடுக்கப்பட்ட அதே நடவடிக்கைகளில் எந்த மாற்றமும் இல்லாமல் இனியும் தொடரும். இதில் எந்த அரசியல் குறுக்கீடுகளும் இல்லை என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments